Saturday, September 6, 2008

ஆறாவது ஊதியக்குழு-ஓர் பார்வை

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது அரசிதழிலும் சிற்சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசு அறிவித்த அதே சூட்டோடு தமிழகம் முதற்கொண்டு அரியானா போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கும் 01.01.2006 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வினை அளிப்பதாகத்தெரிவித்து தமிழக அரசு ஓர் குழுவினை அமைத்து அரசாணையும் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு,அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை எப்படியெல்லாம் குறைக்கப்பட்டு அறிவித்துள்ளது என்ற ஓர் ஒப்பீடினை பாருங்கள்

தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அகவிலைப்படி உயர்வு:-

From 1-1-2006- 24%

From 1-7-2006-29% [5%]

From 1-1-2007-35% [6%]

From 1-7-2007-41% [6%]

From 1-1-2008-47% [6%]

From 1-7-2008-55% [8%]


அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு

From 1-1-2006-No DA

From 1-7-2006-2%

From 1-1-2007-6% [4%]

From 1-7-2007-9% [3%]

From 1-1-2008-12%[3%]

இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் 01.07.2006 ல் வழங்க வேண்டிய அகவிலைப்படியில் 60% அளவு குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல் 1-1-2007,01.07.2007,01.01.2008,ல் வழங்கவேண்டிய அகவிலைப்படியில் முறையே 33.33%,50% ,50%, குறைக்கப்பட்டுள்ளது .01.07.2008 ல் வழங்கவேண்டிய அகவிலைப்படியாக குறிப்பிடப்பட்டுள்ள உயர்வு 12%(4%)

முதலில் ஊதிய உயர்வு 40% முதல் 50% வரை இருக்கும் என அறிவித்து விட்டு பின் சுருதி இறங்கி 28% வரை இருக்கும் என தெரிவித்து இறுதியில் 21% அளவே உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகையினால் 33.33% முதல் 60% வரை குறைக்கப்பட்ட அகவிலைப்படி ஏற்றுக்கொள்ள இயலாது அல்லவா?

பரிந்துரைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு இப்படி இருந்திருக்க வேண்டும்.

From 1-1-2006-No DA

From 1-7-2006-4%

From 1-1-2007-5%

From 1-7-2007-5%

From 1-1-2008-5%

SIX PAY COMMISSION GAZETTE,NOTIFICATION AND RESOLUTION FOR PENSIONERS AND PENSION CALCULATOR

இன்றைய ஸ்பெஷல்:-
கர்ம வீரை காமராஜர் பற்றிய தொகுப்பு இங்கே உங்களுக்காக தமிழில் மென் நூல் வடிவில்.இங்கே தரவிரக்கவும்