Saturday, August 30, 2008

சம்பள கமிஷன்.......

இந்திய அரசாங்கத்தால் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 01.01.2006 முதல் முன் தேதியிட்டு 01.09.2008 முதல் வழங்கப்பட உள்ளது.ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாக இல்லை என அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.இந்த நிலையில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட பரிந்துரைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.ஊதியக்குழு பரிந்துரைகளினை பார்க்கும் பொழுது அடித்தள பணியாளர்களுக்கான ஊதிய விகிதங்களில் மாற்றம் அதிகமில்லாத போதிலும் அரசு உயரதிகாரிகளுக்கான சம்பளவிகிதம் முந்தைய ஊதியக்குழு பரிந்துரைகள் போலவே மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது தெரியவரும்.வளர்ந்து வரும் நாடான நமக்கு சம்பளவிகிதம் அதிகமாகத்தோன்றினாலும் அரசாங்கத்தால் செய்யப்படுகின்ற,அரசியல்வாதிகளால் செய்யப்படுகின்ற ஊதாரிச்செலவுகள் மிக அதிகம் அல்லவா?பணவீக்கவிகிதம் இரட்டை இலக்கைத்தாண்டி சென்செக்ஸ் குறியீட்டினைப்போல் உயர்ந்துகொண்டே வருகிறது.நிதியமைச்சரே பணவீக்கத்தினைக்குறைக்க பலவழிகளில் முயன்றுவிட்டேன்.யாராவது பணவீக்கத்தினைக்குறைக்க வழி இருந்தால் கூறுங்கள் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.சாதாரண கார்ப்பரேட் கம்பேனிகள் முதற்கொண்டு ஐ.டி கம்பேனிகள் வரை குறைந்தபட்ச சம்பளமே 20,000க்கு மேல்தான் தருகின்றன.இன்று விலைவாசி உயர்வுக்கும்,நிலமதிப்பு கூடுவதற்கும்,வாடகை கூடுவதற்கும் அவர்கள் பெறும் நல்ல சம்பளம் என்றால் அது மிகை இல்லை.இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக பி,சி,டி பிரிவு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கதல்ல என்பதே என் எண்ணம்.

அரசிதழினை தரவிறக்க லிங்க்1 லிங்க்2,
குழு பரிந்துரைகள் தரவிறக்க

இன்றைய ஸ்பெஷல்:-

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் பாதுகாத்துக்கொள்வது எப்படி சிறு விளக்கம் இங்கே உங்களுக்காக இங்கே தரவிறக்குங்கள்.